சேலத்தில் மாடியில் இருந்து தள்ளி மனைவியை கொல்ல முயற்சி கட்டிட தொழிலாளி கைது


சேலத்தில் மாடியில் இருந்து தள்ளி மனைவியை கொல்ல முயற்சி கட்டிட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 8 May 2019 10:00 PM GMT (Updated: 8 May 2019 8:00 PM GMT)

சேலத்தில் குடும்ப தகராறில் மாடியில் இருந்து கீழே தள்ளி மனைவியை கொல்ல முயன்ற கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

சேலம் மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 47), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா(45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த திருமுருகன் தனது மனைவி விஜயாவை முதல் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அப்போது அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் விஜயாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story