கோடை விடுமுறை: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி,
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து உள்ளது. அதே போல் நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் காலையில் சூரியன் உதயமாவதை பார்த்து விட்டு, முக்கடல் சங்கமத்தில் நீராடி, பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று பார்த்து மகிழ்ந்தனர். படகில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.
அதன்பிறகு கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம், காமராஜர் நினைவு மண்டபம் சன்செட் பாயிண்ட் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பார்த்தனர்.
இதேபோல் ‘குமரியின் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பகல் 2.30 மணி அளவில் திற்பரப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அப்போது சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அதன்பிறகு மாத்தூர் தொட்டிபாலம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை ஆகிய பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று சுற்றி பார்த்தனர். இதனால் திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிபாலம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story