திருமண ஏக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


திருமண ஏக்கத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 6:02 PM GMT)

போளூர் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

போளூர்,

போளூரை அடுத்த கொம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன்கள் ராஜி (வயது 35), சதீஷ் (27), இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்று விட்டனர். ராஜி, சதீஷ் ஆகியோர் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவரும் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க மணி பல இடங்களில் பெண் பார்த்து வந்தார். ஆனால், ராஜிக்கு எந்த பெண்ணும் அமையவில்லை. அண்ணனுக்கு திருமணம் நடக்காததால் தம்பி சதீசுக்கும் திருமணம் தள்ளிப்போனது. இதனால் அண்ணன், தம்பி இருவரும் விரக்தி அடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு ராஜி கொம்மனந்தல் கிராமத்துக்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று சதீஷ் ஊருக்கு வந்துள்ளார்.

அன்று இரவு 8.30 மணி அளவில், செல்வம்பேட்டை அருகே தனியார் பள்ளி எதிரில் உள்ள சிறுபாலத்தில் சதீஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் தனது அண்ணன் ராஜிக்கு போன் செய்து, திருமணம் நடக்காத ஏக்கத்தில் நான் விஷம் குடித்துவிட்டதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜி, தனது உறவினர்களை அழைத்து கொண்டு செல்வம்பேட்டைக்கு சென்றார்.

அங்கு பாலத்தில் மயங்கி கிடந்த சதீசை மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணி போளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போளூர்,
போளூர் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

போளூரை அடுத்த கொம்மனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன்கள் ராஜி (வயது 35), சதீஷ் (27), இவர்கள் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்று விட்டனர். ராஜி, சதீஷ் ஆகியோர் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவரும் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க மணி பல இடங்களில் பெண் பார்த்து வந்தார். ஆனால், ராஜிக்கு எந்த பெண்ணும் அமையவில்லை. அண்ணனுக்கு திருமணம் நடக்காததால் தம்பி சதீசுக்கும் திருமணம் தள்ளிப்போனது. இதனால் அண்ணன், தம்பி இருவரும் விரக்தி அடைந்தனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதாக கூறி விட்டு ராஜி கொம்மனந்தல் கிராமத்துக்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று சதீஷ் ஊருக்கு வந்துள்ளார்.

அன்று இரவு 8.30 மணி அளவில், செல்வம்பேட்டை அருகே தனியார் பள்ளி எதிரில் உள்ள சிறுபாலத்தில் சதீஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் தனது அண்ணன் ராஜிக்கு போன் செய்து, திருமணம் நடக்காத ஏக்கத்தில் நான் விஷம் குடித்துவிட்டதாக கூறி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜி, தனது உறவினர்களை அழைத்து கொண்டு செல்வம்பேட்டைக்கு சென்றார்.

அங்கு பாலத்தில் மயங்கி கிடந்த சதீசை மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மணி போளூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story