பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 17 May 2019 11:15 PM GMT (Updated: 17 May 2019 8:36 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பகுதியாக ரத்து

மூர்மார்கெட்-திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு புறப்படும் விரைவு மின்சார ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூர்மார்கெட்-அரக்கோணம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

இதேபோல் அரக்கோணம்-சென்னை கடற்கரை காலை 6.25 மணிக்கு புறப்படும் விரைவு மின்சார ரெயில் நாளை அரக்கோணம்-ஆவடி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு ஆவடியில் இருந்து புறப்படும்.

முழுவதும் ரத்து

மூர்மார்கெட்-திருவள்ளூர் இரவு 8.55, 9.40, 11.10, 11.45 மணி, மூர்மார்கெட்-அரக்கோணம் இரவு 9.15, 10.10, 10.45 மணி, திருவள்ளூர்-மூர்மார்கெட் இரவு 9.55 மணி, திருவள்ளூர்-ஆவடி இரவு 10.10 மணி, திருத்தணி-மூர்மார்கெட் இரவு 9.45 மணி, அரக்கோணம்-மூர்மார்கெட் இரவு 9.25, 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (சனிக்கிழமை) ரத்து செய்யப்படுகிறது.

மூர்மார்கெட், சென்னை கடற்கரையில் இருந்து ஆவடி, எண்ணூர் அரக்கோணம், திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர் செல்லும் 46 மின்சார ரெயில்கள் நாளை நள்ளிரவு 1.20 மணி முதல் மாறுநாள் காலை 10.45 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக ஆவடி, அரக்கோணம், திருவள்ளூர், பட்டாபிராம் சைடிங், திருத்தணி, கடம்பத்தூர், பொன்னேரி, வேலூரில் இருந்து மூர்மார்கெட் மற்றும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் 55 மின்சார ரெயில்கள் நாளை அதிகாலை 3.20 மணி முதல் காலை 8 மணி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு பயணிகள் ரெயில்

மூர்மார்கெட்-திருவள்ளூர் இடையே இன்று இரவு 8.25, 11.45, 11.55 மணி, மூர்மார்கெட்-அரக்கோணம் இடையே இன்று இரவு 9.20, 10.20 மணி மற்றும் மூர்மார்கெட்-ஆவடி இடையே இன்று இரவு 11.50 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கமாக அரக்கோணம்-மூர்மார்கெட் இடையே இன்று இரவு 9.55, 10 மணி, திருவள்ளூர்-ஆவடி இடையே இன்று இரவு 10.40 மணி, திருவள்ளூர்-மூர்மார்கெட் இடையே இன்று இரவு 10 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

மூர்மார்கெட்-திருப்பதி இடையே நாளை காலை 7.30 மணி, மூர்மார்கெட்-அரக்கோணம் இடையே நாளை அதிகாலை 4.40, 5.10, 6.15, 8.05 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக அரக்கோணம்-மூர்மார்கெட் இடையே நாளை அதிகாலை 3.45, 4.40, 6, 6.40, 9.15 மணி மற்றும் வேலூர்-சென்னை கடற்கரை இடையே காலை 6 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story