கடலூர் முதுநகர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


கடலூர் முதுநகர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 19 May 2019 9:45 PM GMT (Updated: 19 May 2019 7:27 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பம் கொய்யாத்தோப்பை சேர்ந்தவர் சங்கர்(வயது 47). தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதி. கடந்த சில நாட்களாக சங்கர் சரியாக வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் ஜோதி தவித்தார். எனவே அவர், சங்கரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியதை கண்ட ஜோதி அதிர்ச்சி அடைந்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story