சாயல்குடி அருகே குடும்பத்தகராறில் மனைவி அரிவாளால் வெட்டிக்கொலை கணவர் கைது


சாயல்குடி அருகே குடும்பத்தகராறில் மனைவி அரிவாளால் வெட்டிக்கொலை கணவர் கைது
x
தினத்தந்தி 25 May 2019 11:30 PM GMT (Updated: 25 May 2019 9:58 PM GMT)

சாயல்குடி அருகே குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

சாயல்குடி,

சாயல்குடி அருகே உள்ள கடுகுசந்தை சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி அழகுவள்ளி (வயது 60). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவர் திருமணமாகி தங்கச்சிமடத்தில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குருசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கணவன்–மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் இருவரும் தூங்கச்சென்று விட்டனர். ஆனாலும் ஆத்திரம் தீராத நிலையில் குருசாமி அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த அழகுவள்ளியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிராம மக்கள் சாயல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து அழகுவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து குருசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story