வேதாரண்யம் பகுதியில் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்


வேதாரண்யம் பகுதியில் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 4 Jun 2019 11:00 PM GMT (Updated: 4 Jun 2019 7:11 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் 4 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் ஏமாற்றம் அடைந்தனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் தாலுகாவில் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசியதால் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கடந்த 4 நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடி தடைக்காலம் நடைபெறுவதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் கடல் சீற்றம் காரணமாக பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாததால் வேதாரண்யம் பகுதியில் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது.

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றம் குறைந்ததால் 4 நாட்களுக்கு பிறகு பைபர் படகு மீனவர்கள் நேற்று முன்தினம் மாலையில் மீன்பிடிக்க சென்றனர். அதிக மீன்கள் சிக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story