பராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு


பராமரிப்பு பணி: மின்சார ரெயில்கள் ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 10:00 PM GMT (Updated: 4 Jun 2019 8:40 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 8.55, 9.40, 11.10, 11.45 மணி, மூர்மார்க்கெட்- அரக்கோணம் இரவு 9.15, 10.10, 10.45 மணி, மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 9.50, 10 மணி, சென்னை கடற்கரை- ஆவடி இரவு 9.45 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் மாலை 6.55, 9.25, 9.45 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இரவு 8.50, 9.55 மணி, திருவள்ளூர்-ஆவடி இரவு 10.10 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று (புதன்கிழமை) முதல் 7-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 10.10, 10.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 11.45, 11.50 மணி, வேளச்சேரி-ஆவடி இரவு 9.05 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் இரவு 11.55 மணிக்கு இன்று முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப் படுகிறது. மறுமார்க்கமாக திருவள்ளூர்-ஆவடி இரவு 10.55 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் 10 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 10.10 மணிக்கு இன்று முதல் 7-ந் தேதி வரை சிறப்பு பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story