ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்


ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 6:47 PM GMT)

ஆம்புலன்ஸ் டிரைவர் கொலை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் 2 வாலிபர்கள் சரண் அடைந்தனர்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி அருகே உள்ள வடகுச்சிப் பாளை யத்தை சேர்ந்தவர் இளவரசன் மகன் தினேஷ்குமார் (வயது 24). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரான இவர் கடந்த 6-ந் தேதி இரவு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை நுழைவு வாயில் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் முண்டியம்பாக்கம் காலனியை சேர்ந்த முருகை யன் (49) என்பவரிடம் சென்று சிகரெட் வாங்கிக்கொண்டு ரூ.500-ஐ கொடுத்துள்ளார். அதற்கு முருகையன் சில்லரை இல்லை என்று கூறினார்.

இதனால் அவர்களுக் கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தினேஷ் குமார், முருகையனை தாக்கினார். இதை தடுக்க வந்த முருகையனின் மனைவி செண்பக வள்ளி, மகன் அகிலன் ஆகி யோரையும் தினேஷ் குமார் தாக்கினார். இதைய றிந்ததும் முருகை யனின் மூத்த மகனான ஆகாஷ் (21) தனது நண்பர் களுடன் சேர்ந்து அங்கு வந்து தினேஷ் குமாரை சரமாரி யாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காய மடைந்த தினேஷ் குமார் இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் முருகையன், அவரது மகன் ஆகாஷ் உள்பட 9 பேர் மீது விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகையன், ஆகாஷ், கலையரசன், பார்த்திபன் ஆகிய 4 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர். மேலும் 5 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முண்டியம்பாக்கம் காலனியை சேர்ந்த கோவில்பிள்ளை மகன் சுதாகர் (22), சிவா மகன் சிவநேசன் (25) ஆகியோர் நேற்று விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத் தில் சரண் அடைந்தனர். இதையடுத்து நீதிபதி பாரதி உத்தரவின்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்பு டைய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story