உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார்


உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீடு கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 7:06 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இட ஒதுக்கீட்டை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார்.

நாகப்பட்டினம்,

உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள 21 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் 214 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக இட ஒதுக்கீடு தமிழக அரசினால் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது நாகை மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 3 ஆயிரத்து 426 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்காக வார்டு வாரியான இட ஒதுக்கீட்டினை நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டார். இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார் பெற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கூடுதல் திட்ட இயக்குனர் (கஜா புயல் மறுவாழ்வு, மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு) பிரதீப் குமார், நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கண்மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) ஆறுமுகம் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story