மணப்பாடு கடற்கரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மணல் திட்டு மீனவர்கள் அவதி


மணப்பாடு கடற்கரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மணல் திட்டு மீனவர்கள் அவதி
x
தினத்தந்தி 14 Jun 2019 10:00 PM GMT (Updated: 14 Jun 2019 1:28 PM GMT)

மணப்பாடு கடற்கரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மணல் திட்டால் மீனவர்கள் அவதி படுகிறார்கள்.

உடன்குடி, 

மணப்பாடு கடற்கரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மணல் திட்டால் மீனவர்கள் அவதி படுகிறார்கள்.

மணப்பாடு 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி அருகே உள்ளது மணப்பாடு. இந்த மணப்பாடு பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கடற்கரையாகும். இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, கடல் வழி பயணிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம், சவேரியார் வாழ்ந்த குகை, நாழிக்கிணறு, கடற்கரையில் குடிநீர் கிணறுகள், வருடம் தோறும் கடல் விளையாட்டுகள் என பல்வேறு வகையில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒரு கடற்கரை கிராமம் ஆகும்.

மணல் திட்டு 

இப்படிபட்ட கடற்கரையில் இயற்கையாக உருவாகும் மணல் திட்டுகளால் இங்கு உள்ள மீனவர்கள் படாதபாடு படுகின்றனர். கடற்கரைக்கு படகுகளை கொண்டு வந்து மீன்களை இறக்கிடவும், பின்னர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீளமாக உருவாகும் மணல் திட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் அடிக்கடி மீனவர்கள் தங்கள் சொந்த செலவில் பொக்லைன் எந்திரம் கொண்டு மண்ணை அகற்றி வருகிறார்கள். இருந்தாலும் இந்த மணல் திட்டை நிரந்தரமாக தடுக்க தூண்டில் வளைவு அமைப்பது தான் ஒரே வழி. எனவே அரசு தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Next Story