குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஆனந்த் வழங்கினார்


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஆனந்த் வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 9:18 PM GMT)

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் தினத்தையொட்டி மாவட்ட அளவில் பள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக குழந்தை தொழிலாளர் உறுமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர் களும் ஏற்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) பூஸ்ஷணகுமார், (நிலம்) பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story