திருவாரூரில் ரூ.2½ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


திருவாரூரில் ரூ.2½ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:45 PM GMT (Updated: 25 Jun 2019 7:05 PM GMT)

திருவாரூரில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா, சுயதொழில் தொடங்க கடனுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 217 மனுக்களை வழங்கினர்.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

அதனைத்தொடர்ந்து 5 பேருக்கு ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான திருமண நிதி உதவியுடன் கூடிய தாலிக்கு தங்கத்தினையும், ஒருவருக்கு ரூ.5 ஆயிரத்து 800 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜெயதீபன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ஜெயராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூஸ்ஷனகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story