ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம் கோவில் கருவறையில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை


ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம் கோவில் கருவறையில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2019 10:15 PM GMT (Updated: 28 Jun 2019 7:31 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே கோவில் கருவறையில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே திருப்பதிசாரம் கீழரையை சேர்ந்தவர் துரைசாமி (வயது 64). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக இருந்தார். நேற்று காலை இவர் கோவிலுக்கு பூஜை செய்ய போவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து உறவினர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர். ஆனால் அவரை காணவில்லை. இதனையடுத்து கோவில் வளாகத்தில் உள்ள மற்றொரு சன்னதியின் கருவறைக்குள் பார்த்த போது, அங்கு துரைசாமி வேட்டியால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்ததும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

துரைசாமி தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த துரைசாமிக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கோவில் கருவறையில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story