நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தற்கொலை


நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 28 Jun 2019 11:30 PM GMT (Updated: 28 Jun 2019 7:36 PM GMT)

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நித்திரவிளை,

நித்திரவிளை அருகே சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ், மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். மூத்த மகள் கோயம்புத்தூரில் தங்கியிருந்து படித்து வருகிறார். 2-வது மகள் அனுதாஸ் (வயது 19) மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலையில் கிறிஸ்துதாஸ் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். மனைவி கீதா அருகில் உள்ள ஓட்டலில் சமையல் வேலைக்கு சென்றார். அனுதாஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

மதியம் கீதா வீட்டுக்கு வந்த போது, உத்திரத்தில் அனுதாசின் உடல் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நித்திரவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாகும்.

Next Story