கர்நாடகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்


கர்நாடகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்
x
தினத்தந்தி 29 Jun 2019 10:15 PM GMT (Updated: 29 Jun 2019 9:38 PM GMT)

கர்நாடகத்தில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளதோடு, 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு,

இதுதொடர்பாக நேற்று கர்நாடக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் விவரம் வருமாறு:-

* விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய பரமேஸ் பாண்டே ஆள்சேர்ப்பு, நிர்வாக சீர்த்திருத்த துறை (ஜனஸ்பந்தனா) கூடுதல் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

* ஆள்சேர்ப்பு, நிர்வாக சீர்த்திருத்த துறை (நிர்வாக புனரமைப்பு, பயிற்சி மற்றும் அரசு ஓய்வூதியம்) கூடுதல் முதன்மை செயலாளர் மஞ்சுளா, ஆள்சேர்ப்பு, நிர்வாக சீர்த்திருத்த துறை கூடுதல் முதன்மை செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவர் ஆள்சேர்ப்பு, நிர்வாக சீர்த்திருத்த துறை (நிர்வாக சீர்த்திருத்தம், பயிற்சி மற்றும் ஓய்வூதியம்) கூடுதல் முதன்மை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

* விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பிய சந்தீப் தேவ், வனம், சுற்றுசூழல் துறை கூடுதல் முதன்மை செயலாளராக செயல்படுவார். இவர் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

* ஆள்சேர்ப்பு, நிர்வாக சீர்த்திருத்தம் (ஜனஸ்பந்தனா) துறை கூடுதல் முதன்மை செயலாளர் ராஜ்குமார் கடாரியா, வருவாய்த்துறை கூடுதல் முதன்மை செயலாளராக செயல்படுவார். இவர் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் முதன்மை செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

* பணி காத்திருப்பு பட்டியலில் இருந்த ஹர்ஷ் குப்தா, வீட்டு வசதித்துறை செயலாளராக பணியை தொடர்வார்.

* பணி காத்திருப்பு பட்டியலில் இருந்த மணிவண்ணன், தொழிலாளர் பிரிவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

வினோத் பிரியா

* விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பியுள்ள ஹேமலதா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு, மாற்றுத்திறனாளி-முதியவர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* நிதித்துறை (செலவு) செயலாளர் எக்ரூப் கவுர், நிதித்துறை (பட்ஜெட் மற்றும் மூலதனம்) செயலாளராக செயல்படுவார். இவர் கர்நாடக மாநில நிதி வாரிய நிர்வாக இயக்குனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

* வீட்டு வசதித்துறை செயலாளர் ரவிசங்கர், கிருஷ்ணா நதிநீர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக செயல்படுவார்.

* பொதுஅறிவுறுத்தல் துறை கமிஷனராக ஜாபர், நிதித்துறை (செலவு) செயலாளராக பணி செய்வார். இவர் கர்நாடக மாநில பானம் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக செயல்படுவார்.

* பணி காத்திருப்பு பட்டியலில் இருக்கும் சல்மா கே.பாத்திமா, கர்நாடக உணவு, பொது வினியோக வாரியத்தின் நிர்வாக இயக்குனராக செயல்படுவார்.

* பெலகாவி ‘ஸ்மார்ட் சிட்டி‘ வாரிய நிர்வாக இயக்குனர் ஜியாஉல்லா, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இயக்குனராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

* சித்ரதுர்கா மாவட்ட கலெக்டர் வினோத் பிரியா, தொழிலாளர் துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கர்நாடக அரசு தேர்வாணைய துறை செயல் இயக்குனர் கிரீஷ், சித்ரதுர்கா மாவட்ட கலெக்டராக செயல்படுவார்.

ஐ.பி.எஸ். அதிகாரி முருகன்

ஐ.பி.எஸ். அதிகாரிகளின் பணி இடமாற்ற விவரம் வருமாறு:-

* பெங்களூரு கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங், பெங்களூரு போலீஸ் தலைமை அலுவலகத்தில் (நிர்வாகம்) ஐ.ஜி.யாக செயல்படுவார்.

* கர்நாடக லோக்ஆயுக்தா ஐ.ஜி. எஸ்.முருகன், பெங்களூரு நகர கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

* பெங்களூருவில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு துணை ஐ.ஜி. சித்தராமப்பா, பெங்களூருவில் தீயணைப்பு பிரிவு துணை ஐ.ஜி.யாக செயல்படுவார்.

* பெங்களூருவில் ரெயில்வே பிரிவு சூப்பிரண்டாக இருக்கும் அனுசித், பெங்களூரு ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனராக செயல்படுவார்.

* பாகல்கோட்டை மாவட்ட சூப்பிரண்டு அபினவ் கெரே, கர்நாடக ரிசர்வ் போலீஸ் 4-வது பட்டாலியன் கமாண்டோவாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அப்துல் அகாத்

* பெங்களூருவில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டாக இருக்கும் தீக்கா கிஷோர் பாபு, கலபுரகி மாநகர சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனராக செயல்படுவார்.

* பெங்களூருவில் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு சூப்பிரண்டாக செயல்பட்டு வரும் லோகேஷ் பரமப்பா ஜகாலசார், பாகல்கோட்டை மாவட்ட சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பெங்களூரு ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத், பெங்களூரு ஊழல் தடுப்புபடை சூப்பிரண்டாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* பெங்களூரு நகர பொதுமக்கள் உரிமைகள் அமலாக்க இயக்குனரகத்தின் சூப்பிரண்டு தேவராஜூ, ஹாவேரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக செயல்படுவார்.

* பெங்களூருவில் ஊழல் தடுப்புபடை சூப்பிரண்டாக இருக்கும் சஞ்சீவ் எம்.பட்டீல், பெங்களூரு ரெயில்வே பிரிவு சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* ஹாவேரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராமப்பா, பெங்களூரு நகர பொதுமக்கள் உரிமைகள் அமலாக்க இயக்குனரகத்தின் சூப்பிரண்டாக செயல்படுவார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story