விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் 20 டன் அரிசியில் அன்னபூஜை


விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் 20 டன் அரிசியில் அன்னபூஜை
x
தினத்தந்தி 4 July 2019 10:30 PM GMT (Updated: 4 July 2019 3:15 PM GMT)

கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி 20 டன் அரிசியை குவித்து வைத்து அன்னபூஜை நடத்தப்பட்டது.

கன்னியாகுமரி,


சுவாமி விவேகானந்தர் 1902–ம் ஆண்டு ஜூலை 4–ந் தேதி சமாதி அடைந்தார். அவரது நினைவு தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் கேந்திர கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் அரிசியை மலை போல் குவித்து வைத்து அன்னபூஜை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று அன்னபூஜை நடைபெற்றது. இதற்காக குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அரிசி வசூல் செய்யப்பட்டது.


இந்த ஆண்டு 20 டன் அரிசி கிடைத்தது. அரிசியை கேந்திர வளாகத்தில் குவித்து வைத்து அன்னபூஜை நடத்தப்பட்டது. விவேகானந்த கேந்திராவை சேர்ந்த லீலா, சந்திரா ஆகியோர் ஐக்கிய மந்திரம் ஓதினார்கள். தூத்துக்குடி மண்டல கேந்திர பொறுப்பாளர் பரமகுரு வரவேற்று பேசினார்.

மூத்த ஆயுள் கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா அகில பாரத பொதுச்செயலாளர் பானுதாஸ், மணி மகேஷ்வரன், கேந்திர செயலாளர் அனுமந்தராவ், தலைமை நிலைய செயலாளர் ரகுநாதன்நாயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story