வேதாரண்யத்தில் ஒப்பந்தக்காரரிடம் ரூ.73 ஆயிரம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வேதாரண்யத்தில் ஒப்பந்தக்காரரிடம் ரூ.73 ஆயிரம் வழிப்பறி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 July 2019 10:15 PM GMT (Updated: 10 July 2019 6:44 PM GMT)

வேதாரண்யத்தில் ஒப்பந்தக்காரரிடம் ரூ.73 ஆயிரம் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள முதலியார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் வேதாரண்யம் நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர். தற்போது ஒரு தனியார் உப்பு நிறுவனத்தில் ஒப்பந்தக்காரராக உள்ளார். சம்பவத்தன்று இவர் வேதாரண்யம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் அவரை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் வீரமுத்துவின் மோட்டார் சைக்கிளில் மாட்டி இருந்த பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.73 ஆயிரம் இருந்தது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசில் வீரமுத்து புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பணத்தை வழிப்பறி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கண்காணிப்பு கேமரா

மர்ம நபர்கள் வீரமுத்துவிடம் பணத்தை பறித்து சென்ற காட்சிகள் வேதாரண்யம் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

Next Story