மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்


மாவட்டத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 7:18 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், 16-ந் தேதி லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும். இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 16-ந் தேதி மழை பெய்ய வாய்ப்பு இல்லை. அதேபோல் இன்றும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (திங்கட்கிழமை) 4 கி.மீ. வேகத்திலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 16-ந் தேதி 6 கி.மீ. வேகத்திலும் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக முறையே 77 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 35, 35, 35, 30 சதவீதமாகவும் இருக்கும்.

கோழிப்பண்ணை யாளருக்கான சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 4 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றின் வேகம் கடந்த வாரத்தை விட குறைய வாய்ப்பு உள்ளது. முட்டை எடையை அதிகரிக்க, டன் ஒன்றிற்கு 6 முதல் 8 கிலோ வரை தாவர எண்ணெயும், ஓடு சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றின் அளவுகள் சரிபடுத்தப்பட வேண்டும்.

கடந்த வாரம் இறந்த கோழிகளில் பெரும்பாலும் மேல்மூச்சுக்குழாய் அயற்சி நோயினால் தாக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்து உள்ளது. எனவே கோழிப்பண்ணையாளர்கள்், அதற்கு தகுந்தாற்போல் சிறந்த உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story