ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஆகஸ்டு 28-ந் தேதி நடக்கிறது


ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம் ஆகஸ்டு 28-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 8:24 PM GMT)

அரியலூர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை வருகிற 13-ந் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story