குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:30 PM GMT (Updated: 3 Aug 2019 7:24 PM GMT)

ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்ஜெயங்கொண்டத்தில் நடந்தது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி ஆலோசனையின் படி, ஜெயங்கொண்டம் போலீசார் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்ஜெயங்கொண்டத்தில் நடந்தது. ஊர்வலத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரேமா (உடையார்பாளையம்), ஜெகதீசன் (ஆண்டிமடம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வரவேற்றார். ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் துரைராஜன் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் குழந்தை தொழிலாளரை ஒழிப்போம், குழந்தை திருமணத்தை தடுப்போம், குழந்தைகளை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாப் போம். குழந்தைகளுக்கு பாலியல் சம்மந்தமான கல்வி அறிவை புகட்டுவோம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அண்ணாசிலையில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கடைவீதி, 4 ரோடு, தா.பழூர் ரோடு, பஸ் நிலைய ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பாபு, அனைத்துமகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, அரியலூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி, அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Next Story