கணவர் கண் எதிரே பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி - பெண் பலி


கணவர் கண் எதிரே பரிதாபம்: தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி - பெண் பலி
x
தினத்தந்தி 9 Aug 2019 10:30 PM GMT (Updated: 9 Aug 2019 8:39 PM GMT)

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி, கணவர் கண் எதிரே பெண் பரிதாபமாக இறந்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த புதுபெருங்களத்தூர் குண்டுமேடு அண்ணா தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மனைவி முத்துலட்சுமி (30) உடன் மோட்டார் சைக்கிளில் துரைப்பாக்கம்-குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலை வழியாக துரைப்பாக்கம் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

கோவிலம்பாக்கம் அருகே வந்தபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி, இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது முத்துலட்சுமி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அவர், கணவர் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

சேகர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய தண்ணீர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

* மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் எர்ணாவூரை சேர்ந்த கண்ணதாசன் (வயது 38) தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

* பள்ளிக்கரணையில் சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மறை மலைநகரை சேர்ந்த காவலாளி முனுசாமி (45) பலியானார்.

*திருமங்கலத்தில் ஆட்டோ டிரைவர் கார்த்திக் (24) கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கவுச்சி கார்த்திக் (36) என்பவர் கைது செய்யப்பட்டார்.

* புழல் அருகே மாதவரம் மண்டல அலுவலகத்துக்கு உட்பட்ட வார்டு அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் அருகில் உள்ள இ-சேவை மையம், சுகாதார அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட் கள் எரிந்து நாசமாயின.

* செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்கி இருந்த வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் தீக்கிரையாகின.

Next Story