ஆபாச குறுந்தகவல் அனுப்பி 50 பெண்களுக்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது

ஆபாச குறுந்தகவல் அனுப்பி 50 பெண்களுக்கு தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை கொலாபாவை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு அறி முகம் இல்லாத ஒருவரின் செல்போன் எண்ணில் இருந்து ஆபாச குறுந்தகவல் வந்தது. இதை பார்த்து மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில், அந்த எண்ணில் தொடர்ந்து மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மனஉளைச்சல் அடைந்த கல்லூரி மாணவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்த சச்சின் (வயது30) என்பவர் தான் கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதை ஒப்புக்கொண்டார். மேலும் இதுபோல சுமார் 50 பெண்களுக்கு அவர் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
மும்பை கொலாபாவை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கு அறி முகம் இல்லாத ஒருவரின் செல்போன் எண்ணில் இருந்து ஆபாச குறுந்தகவல் வந்தது. இதை பார்த்து மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில், அந்த எண்ணில் தொடர்ந்து மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் மனஉளைச்சல் அடைந்த கல்லூரி மாணவி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சாக்கிநாக்கா பகுதியை சேர்ந்த சச்சின் (வயது30) என்பவர் தான் கல்லூரி மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை கொடுத்து வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பியதை ஒப்புக்கொண்டார். மேலும் இதுபோல சுமார் 50 பெண்களுக்கு அவர் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
Related Tags :
Next Story