நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை: தாராபுரம் கோர்ட்டில் வாலிபர் சரண்


நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை: தாராபுரம் கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 22 Aug 2019 9:45 PM GMT (Updated: 22 Aug 2019 8:38 PM GMT)

நெல்லையில் கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபர் தாராபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

நெல்லை, 

நெல்லை சந்திப்பு கருப்பந்துறை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 18-ந்தேதி கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றங்கரை ரோட்டில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் மணிகண்டனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இதுதொடர்பாக நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதுதவிர நெல்லை விளாகத்தை சேர்ந்த கொம்பையா மகன் ராஜா சின்னத்துரை (வயது 19) என்பவர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். பின்னர் மாஜிஸ்திரேட்டு உத்தரவுப்படி போலீசார் அவரை சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். இந்த கொலை தொடர்பாக மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story