தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Aug 2019 10:28 PM GMT (Updated: 23 Aug 2019 10:28 PM GMT)

தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தண்டலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கார்த்திக் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதை அறிந்த அவரது தாயார் பச்மையம்மாள் ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறாய் என கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த கார்த்திக் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பச்சையம்மாள் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story