சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலை - போலீசார் விசாரணை


சேத்தியாத்தோப்பு அருகே, பெண் கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 1 Sep 2019 9:45 PM GMT (Updated: 1 Sep 2019 7:43 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வீரமுடையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி(வயது 40). இவருடைய மனைவி ரேவதி(34). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். இந்த நிலையில் ரேவதிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜோதிக்கும், ரேவதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை ரேவதி, தனது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர்கள் சேத்தியாத்தோப்பு ராமதாஸ், காட்டுமன்னார்கோவில் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரேவதியின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

இருப்பினும் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து ரேவதியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கொலை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story