நாமக்கல் உழவர்சந்தையில் ரூ.7½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


நாமக்கல் உழவர்சந்தையில் ரூ.7½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 1 Sep 2019 9:45 PM GMT (Updated: 1 Sep 2019 11:02 PM GMT)

நாமக்கல் உழவர்சந்தையில் ரூ.7½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனையானது.

நாமக்கல், 

நாமக்கல்லில் உள்ள கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சந்தைக்கு விடுமுறை நாளான நேற்று 22 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இந்த காய்கறிகள் ரூ.7 லட்சத்து 44 ஆயிரத்து 250-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5 ஆயிரத்து 575 பேர் வாங்கி சென்றனர்.

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.18-க்கும், கத்தரி ரூ.52-க்கும், வெண்டை ரூ.20-க்கும், புடலைக்காய் ரூ.20-க்கும், பீர்க்கன் ரூ.30-க்கும், கேரட் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.48-க்கும், பீன்ஸ் ரூ.80-க்கும், இஞ்சி ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சின்ன வெங்காயம் ரூ.27-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

காளான் கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. காளான் வரத்து குறைந்து விட்டதால், அதன் விலை அதிகரித்து இருப்பதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story