குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது


குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 6:58 PM GMT)

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம், 

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் தந்தையை அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள பீர்க்கன்காரணை தேவநேசன் நகர் 2-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆரோன்(வயது 45). சென்னை மாநகராட்சி குப்பை வாகன டிரைவராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

மேலும் அவர், தினமும் குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டார்.

அடித்துக்கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த அவருடைய மகன் ஆலன், தனது தந்தை ஆரோனை தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

நேற்று மதியம் மீண்டும் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பீர்க்கன்காரணை போலீசார், தந்தையை அடித்துக்கொன்றதாக ஆலனை கைது செய்தனர்.

Next Story