பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 17 Sep 2019 10:30 PM GMT (Updated: 17 Sep 2019 7:06 PM GMT)

பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் தி.மு.க. மற்றும் திராவிடர் கழகம், பெரியாரிய இயக்கங்கள் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ேநற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அம்பேத்கர் சிலையில் இருந்துஏராளமாேனார் ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலையை வந்தடைந்தனர் அடைந்தது. பின்பு பெரியார் சிலைக்கு தி.மு.க., திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியாரிய இயக்கங்கள், தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, செயலாளர் ஆதிசிவம், நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் வீர.ஞானசேகரன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க பொறுப்பாளர் வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story