காதல் தோல்வியால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை


காதல் தோல்வியால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 Sep 2019 10:15 PM GMT (Updated: 20 Sep 2019 10:12 PM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே காதல் தோல்வியால் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் பூர்ணிமா (வயது 23). இவருடைய தாய்-தந்தை ஏற்கனவே இறந்து விட்டனர். பூர்ணிமா தனது சித்தி வீட்டில் தங்கி தையல் தொழில் செய்து வந்தார். இவரும், வாலிபர் ஒருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த வாலிபர் பூர்ணிமாவுடன் பழகுவதை நிறுத்தி கொண்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

மேலும், காதல் தோல்வியால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பூர்ணிமா வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் பூர்ணிமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story