திருவாரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொது வினியோக திட்டத்துக்காக 1,095 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


திருவாரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொது வினியோக திட்டத்துக்காக 1,095 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 26 Sep 2019 10:30 PM GMT (Updated: 26 Sep 2019 7:17 PM GMT)

திருவாரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,095 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மாவட்டத்தில் உள்ள அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி அரிசி மூட்டைகளாக தயாரானது. இந்த அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

1,095 டன் அரிசி

அதன்படி திருவாரூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு 1,095 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் 89 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,095 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story