வெவ்வேறு இடங்களில் விபத்து: என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு


வெவ்வேறு இடங்களில் விபத்து: என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 30 Sep 2019 10:30 PM GMT (Updated: 30 Sep 2019 9:24 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் இறந்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் சத்தியராஜ் (வயது24). என்ஜினீயர். சம்பவத்தன்று சத்தியராஜ் பென்னாகரத்தில் இருந்து கொட்டாவூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சத்தியராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்தியராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்தவர் குபேந்திரன். இவருடைய மகன் முத்து (25). இவர் சேலம் மாவட்டம் வலசையூரில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து மோளையானூருக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story