மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 4 பேர் கைது


மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி; 4 பேர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2019 10:15 PM GMT (Updated: 9 Oct 2019 6:58 PM GMT)

மயிலாடுதுறையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்கள், தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), செந்தில்நாதன் (35), திருவிழந்தூர் பெருமாள்கோவில் வடக்கு வீதியை சேர்ந்த வெங்கடகிரு‌‌ஷ்ணன் (22), கலைஞர் காலனியை சேர்ந்த சுரே‌‌ஷ் (32) என்பதும், அவர்கள் 4 பேரும் சேர்ந்து அந்த வழியாக சென்ற கூறைநாடு பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.800-ஐ வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், செந்தில்நாதன், வெங்கடகிரு‌‌ஷ்ணன், சுரே‌‌ஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

Next Story