திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - போலீசார் விசாரணை


திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 10 Oct 2019 10:45 PM GMT (Updated: 10 Oct 2019 8:46 PM GMT)

திருப்பூரில் பனியன் நிறுவன தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர், 

மதுரையை சேர்ந்தவர் பாண்டியன். (வயது 45).இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாககுடும்பத்தை விட்டு பிரிந்துமதுரையில் இருந்து திருப்பூர்வந்தார்.பின்னர் திருப்பூர் ஜீவாநகரில் தனியாக வீடு எடுத்து தங்கி, அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு பாண்டியனை பார்க்க அவருடைய சகோதரர் ஜெயச்சந்திரன் என்பவர் ஜீவாநகருக்கு வந்தார். தொடர்ந்து வீட்டிற்கு வெளியில் நின்றபடி தனது சகோதரரை அழைத்துகொண்டிருந்தார். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் பாண்டியனிடம் இருந்து வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவர் வீ்ட்டின் உள்ளே செல்ல முடிவு செய்தார். ஆனால் வீ்ட்டின் கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு உடலில் பல்வேறு பகுதிகளில் கத்திக்குத்து மற்றும் அரிவாள் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பாண்டியன் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார்.

அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு கூடினர். தனது சகோதரரின் உடலை பார்த்து ஜெயச்சந்திரன் கதறி அழுது கொண்டிருந்தார். பின்னர் இது குறித்து திருப்பூர் மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் போலீசார், பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து அந்த வீட்டில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஏதாவது கிடக்கிறதா? என போலீசார் சோதனை மேற்கொண்டனர். அக்கம் பக்கத்தினரிடமும் தகவல்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story