திருவாரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் - கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


திருவாரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம் - கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Oct 2019 10:45 PM GMT (Updated: 11 Oct 2019 8:16 PM GMT)

திருவாரூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர், 

திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், இந்தியன் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்து கொண்டு பிளாஸ்டிக்கை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உணவகங்கள், தேநீர், விடுதிகளில் மற்றும் அனைத்துவிதமான கடைகளிலும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தவிர்க்க வேண்டும். பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி பைகள், காகித உறைகள் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருவாரூர் ரெயில் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம், தெற்கு வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் இந்தியன் செஞ்சுலுவை சங்கத்தின் தலைவர் ராஜ்குமார், செயலாளர் வரதராஜன், நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் அண்ணாதுரை, பொதுச்செயலாளர் ரமே‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story