மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 10:30 PM GMT (Updated: 17 Oct 2019 8:28 PM GMT)

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். முகாமில் சிறப்பு சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான நவீன ஊன்றுகோல், பிரெய்லி கடிகாரம், பராமரிப்பு உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் வீட்டுமனை பட்டா என பல்வேறு வகை மனுக்கள் பெறப்பட்டன. உதவி உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த நபர்களுக்கு உடனடியாக அவர்களுக்கான உபகரணங்களை வழங்கிடவேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், 5 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும், ஒரு பயனாளிக்கு ரூ3,400 மதிப்பிலான அதிரும் மடக்குகோல், நல்ல நிலையில் உள்ள நபர் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொண்டமைக்காக 2 பயனாளிக்கு ரூ.37,500 மதிப்பிலான தேசிய சேமிப்பு பத்திரமும், 2 பயனாளிக்கு ரூ.470 மதிப்பிலான நவீன மடக்கு கோல், ஒரு பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டையும் உடனடியாக வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story