கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது


கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2019 10:30 PM GMT (Updated: 19 Oct 2019 9:37 PM GMT)

கொல்லிமலை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர் கைது செய்யப்பட்டார்.

சேந்தமங்கலம், 

கொல்லிமலை சேளூர்நாடு வனப்பகுதியில் சிலர் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அவர்கள் வேட்டைக்கு அதனை பயன்படுத்துவதாகவும் வாழவந்திநாடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் நேற்று அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே சேளூர்நாடு ஊராட்சி அரைக்கல்பட்டியை சேர்ந்த விவசாயி மூவேந்தர் (வயது 30) துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தவர்.அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Next Story