இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்


இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்
x
தினத்தந்தி 26 Oct 2019 11:00 PM GMT (Updated: 26 Oct 2019 4:24 PM GMT)

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் தீ விபத்து, புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளான வீடுகள் சேதம், கால்நடை சேதம், மனித உயிர் இழப்பு, பயிர்கள் சேதம் மற்றும் பேரிடர் குறித்த இதர தகவல்களை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் இயங்கும், அவசர கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண் 1077 மற்றும் 04322222207 என்ற எண்ணிற்கு தெரிவிக்கலாம். மேலும் புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக அலைபேசி எண் 9445000468 மற்றும் 04322222219, அறந்தாங்கி வருவாய் கோட்ட அலுவலக அலைபேசி எண் 9445000469 மற்றும் 04371220589, இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலக அலைபேசி எண் 9445461803 மற்றும் 04339272049 என்ற எண்ணிலும் தகவல் அளிக்கலாம்.

புதுக்கோட்டை தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000641 மற்றும் 04322221566, ஆலங்குடி தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000640 மற்றும் 04322251223, கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000642 மற்றும் 04322275733, கறம்பக்குடி தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9943943206 மற்றும் 04322255199, திருமயம் தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000643 மற்றும் 04333274223, குளத்தூர் தாலுகா அலுவலக அலைபேசி எண் 9445000638 மற்றும் 04339262223 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல் அளிக்கலாம்.

தாசில்தார் அலுவலகங்கள்

மேலும் இலுப்பூர் தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000639 மற்றும் 04339272300, பொன்னமராவதி தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9443835778 மற்றும் 04333260188, விராலிமலை தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9842568018 மற்றும் 04339270777, அறந்தாங்கி தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000644 மற்றும் 04371220528, மணமேல்குடி தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000646 மற்றும் 04371250569, ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலக அலைபேசி எண் 9445000645 மற்றும் 04371233325 என்ற எண்ணையும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story