படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 6:10 PM GMT)

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டு இருக்கிறது.

தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் சேவை மற்றும் வியாபார தொழில்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உள்ளது. உற்பத்தி தொழிலுக்கு எந்தவித மாற்றமும் செய்யப்பட வில்லை. அதேபோல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புபவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இதன் நகல், மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, விலைபுள்ளி மற்றும் போட்டோ ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையம் திருவண்ணாமலை அலுவலகத்திற்கு நேரில் வருகிற 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் வரும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்கள் பெற 8668147561, 9486494621 ஆகிய தொலைபேசியில் வேலை நாட்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story