கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு


கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Oct 2019 11:00 PM GMT (Updated: 31 Oct 2019 7:02 PM GMT)

கல்லணையில், காவிரி ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி,

காவிரி ஒழுங்காற்று குழு ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் மற்றும் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவினர் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் தஞ்சை-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள கல்லணைக்கு வந்து, மதகு பாலங்களை பார்வையிட்டனர்.

அப்போது கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகியவற்றுக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும் முறை, அதன் மூலமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய பணிகள் குறித்து காவிரி ஒழுங்காற்று குழுவினரிடம் பொதுப்பணித்துறை காவிரி வடி நில கோட்ட தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் விளக்கி கூறினர்.

வரவேற்பு

கல்லணைக்கு வந்த காவிரி ஒழுங்காற்று குழுவினரை செயற்பொறியாளர் ராஜன், கல்லணை உதவி பொறியாளர் ஆன்ட்டு ஆகியோர் வரவேற்றனர். கல்லணையை ஆய்வு செய்த பின்னர் குழுவினர் அங்கிருந்து முக்கொம்பு அணைக்கு புறப்பட்டு சென்றனர்.


Next Story