மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு


மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 9:33 PM GMT)

பெரியநாகலூரில் மக்காச்சோள பயிரில் மருந்து தெளிப்பு பணி வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பு பணி உழவர் உற்பத்தியாளர் குழு மூலம் நடைபெற்றது. இந்த பணியை அரியலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் 20 நாள் முதல் 45 நாட்கள் வரை உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு மட்டும் மருந்து தெளிப்பு பணி நடைபெறும் என்றார். மேலும் பெரிய நாகலூர் கிராமத்தில் 20 எக்டர் பரப்பரளவில் அனைத்து பகுதிகளிலும் மருந்து தெளிக்கும் பணி விரைந்து முடித்திட உழவர் உற்பத்தியாளர் குழுவினருக்கு வேளாண்மை இணை இயக்குனர் அறிவுறுத்தினார். தொடர்ந்து மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறைகள் பற்றி வேளாண்மை அலுவலர் சவீதா எடுத்துரைத்தார். அப்போது வேளாண்மை உதவி அலுவலர்கள் வேல்முருகன், சுப்பிரமணியன், ராஜாகிரி, ஸ்ரீதேவி ஆகியோர் உடனிருந்தனார். இதே போல் அருங்கால், சிறுவளூர், அரியலூர் வடக்கு ஆகிய கிராமங்களில் மக்காச்சோள பயிரில் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பில் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பு பணி நடைபெற்று வருகிறது.


Next Story