எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர்


எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு 2,602 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:45 PM GMT (Updated: 3 Nov 2019 9:45 PM GMT)

கரூரில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வினை 2,602 பேர் எழுதினர்.

கரூர்,

ஏழை-எளிய பள்ளி மாணவ, மாணவிகளின் ஆற்றலை கண்டறிந்து அவர்களது கல்விக்கு உதவும் பொருட்டு ஊக்கத்தொகை வழங்குவதற்கு தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 9 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நடந்தது. இதனை எழுதுவதற்காக 2,782 பேர் பதிவு செய்திருந்தனர். எனினும் இந்த தேர்வினை 2,602 பேர் கலந்து கொண்டு எழுதினர். 180 பேர் தேர்வு எழுத வரவில்லை.

அதிகாரிகள் ஆய்வு

கரூர் மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் உள்பட கல்வி அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? தேர்வெழுதுவதில் மாணவர்களுக்கு ஏதும் வசதி குறைபாடு இருக்கிறதா? என்பன உள்ளிட்ட கோணங்களில் மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கரூர் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களிலும், குளித்தலை கல்வி மாவட்டத்தில் 2 மையங்களிலும் தேர்வு நடந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


Next Story