மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,372 மாணவ, மாணவிகள் எழுதினர்


மாவட்டம் முழுவதும் 14 மையங்களில் திறனாய்வு தேர்வு 4,372 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 3 Nov 2019 10:30 PM GMT (Updated: 3 Nov 2019 10:09 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 14 மையங்களில் தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 4 ஆயிரத்து 372 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

நாமக்கல்,

தேசிய திறனாய்வு தேர்வு ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேர்வு நேற்று நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நாமக்கல் கல்வி மாவட்டத்தில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ராசிபுரம் அண்ணாசாலை அரசு பள்ளி உள்பட 6 மையங்களிலும், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் திருச்செங்கோடு அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்பட 8 மையங்களிலும் என மொத்தம் 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

4,372 பேர் எழுதினர்

இந்த தேர்வை எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்து 711 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 339 பேர் தேர்வை எழுதவரவில்லை. மீதமுள்ள 4 ஆயிரத்து 372 பேர் தேர்வை எழுதினர். இத்தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை 2 தாள்களாக நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், திருச்செங்கோடு கல்வி அலுவலர் ரவி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பிளஸ்-2 படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,250-ம், அதன் பிறகு முதுகலை படிப்பை முடிக்கும் வரை 5 ஆண்டுகள் மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story