ஆரல்வாய்மொழி அருகே கண்டக்டர் தற்கொலை வி‌ஷம் குடித்து விட்டு காப்பாற்றும்படி நண்பர்களிடம் கெஞ்சிய பரிதாபம்


ஆரல்வாய்மொழி அருகே கண்டக்டர் தற்கொலை வி‌ஷம் குடித்து விட்டு காப்பாற்றும்படி நண்பர்களிடம் கெஞ்சிய பரிதாபம்
x
தினத்தந்தி 4 Nov 2019 10:15 PM GMT (Updated: 4 Nov 2019 3:55 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே மினிபஸ் கண்டக்டர் வி‌ஷம் குடித்துவிட்டு, காப்பாற்றும்படி நண்பர்களிடம் கெஞ்சினார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே கண்ணன்புதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன், அரசு  போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர். இவருடைய மகன் நாகர்மணி பூதநாதன் (வயது 28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் மினி பஸ்சில் கண்டக்டராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை நாகர்மணி பூதநாதன் குளத்து பகுதிக்கு சென்று வி‌ஷம் குடித்தார். சிறிது நேரத்தில் செத்து விடுவோம் என்று பயந்த அவர், வேகமாக ஊருக்குள் ஓடி வந்து நண்பர்களை சந்தித்து பேசினார். அப்போது மன வேதனையால் வி‌ஷம் குடித்து விட்டேன். ஆனால் இப்போது எனக்கு சாக விருப்பம் இல்லை. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினார். இதனால், அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே, அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சாவு

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை நாகர்மணி பூதநாதன் பரிதாபமாக இறந்தார்.இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததாகவும், அதனால் அவர் வி‌ஷம் குடித்ததாகவும் தெரிய வந்தது. 

Next Story