தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பனியன் நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பனியன் நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 28). இவர் அந்த பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் நிறுவன தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் வெளியில் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். இதன் காரணமாக மிகுந்த மனஉளைச்சலுடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த லட்சுமணன் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், லட்சுமணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த தகவலின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலில் நஷ்டம் காரணமாக பனியன் நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தேவராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 28). இவர் அந்த பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனியன் நிறுவன தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர் வெளியில் பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் வாங்கிய கடனை சரியாக திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் அவதிப்பட்டார். இதன் காரணமாக மிகுந்த மனஉளைச்சலுடன் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த லட்சுமணன் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மயங்கி விழுந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், லட்சுமணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த தகவலின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலில் நஷ்டம் காரணமாக பனியன் நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story