கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்


கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 27 Nov 2019 10:00 PM GMT (Updated: 27 Nov 2019 8:38 PM GMT)

பொம்மிடி அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது கிணற்றில் தவறி விழுந்து விவசாயி இறந்தார்.

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள மாரியம்மன் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது65). விவசாயி. சம்பவத்தன்று இவர் கரிய தாதனூர் கிராமத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் காணவில்லை.இந்தநிலையில் நேற்று காலை அதேபகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரது கிணற்றில் வெள்ளையன் பிணமாக மிதந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொம்மிடி போலீசார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த வெள்ளையனின் உடலை மீட்டனர்.

போலீசார் விசாரணை

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வெள்ளையன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது விவசாயி கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story