உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் - அமைச்சர் காமராஜ் பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் - அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2019 10:45 PM GMT (Updated: 16 Dec 2019 7:46 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் கோட்டூர் தெற்கு ஒன்றியம் கெழுவத்தூர் கிராமத்தில் உள்ள மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை தொடர்ந்து அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். பயத்தோடு தேர்தலை சந்திக்கும் இயக்கம் தி.மு.க. பயமில்லாமல் சந்திக்கும் இயக்கம் அ.தி.மு.க. தேர்தலை எப்படியாவது நிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த தி.மு.க. தோல்வியை கண்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடையும்.

பயிர் காப்பீடு என்பது மத்திய அரசின் திட்டம் எந்த இடங்கள் பாதிப்பு என கணக்கெடுத்து அந்தந்த பகுதிகளில் பயிர் காப்பீட்டு தொகையை வழங்கி வருகிறது. காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் விடுபட்ட பிரச்சினை உள்ள சில இடங்களில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்துக்கொண்டு வருகிறார். பொங்கல் பரிசு வழங்குவதில் எந்த விதமான தடையும் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு எப்போது வழங்கப்படும் என அரசு தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story