படப்பை அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை


படப்பை அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 20 Dec 2019 9:45 PM GMT (Updated: 20 Dec 2019 8:22 PM GMT)

படப்பை அருகே தந்தை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த சோமங்கலம் மேட்டூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் குசேலன். இவருடைய மகன் திருமூர்த்தி (வயது20). இவர் மீது ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையத்தில் செல்போன் திருட்டு வழக்கு உள்ளது. இது சம்பந்தமாக கடந்த மாதம் சிறைக்கு சென்று வந்துள்ளார். கடந்த 4 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்லாமல் இருந்த திருமூர்த்தியை தந்தை குசேலன் கண்டித்து விட்டு கூலி வேலைக்கு சென்று விட்டார்.

நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது திருமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story