வீட்டில் எலும்புக்கூடாக கிடந்தார், கள்ளக்காதல் விவகாரத்தில் என்ஜினீயரை எரித்துகொன்றது அம்பலம் - பெண்ணின் கணவர் உள்பட 8 பேரிடம் விசாரணை


வீட்டில் எலும்புக்கூடாக கிடந்தார், கள்ளக்காதல் விவகாரத்தில் என்ஜினீயரை எரித்துகொன்றது அம்பலம் - பெண்ணின் கணவர் உள்பட 8 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 23 Dec 2019 11:15 PM GMT (Updated: 23 Dec 2019 5:30 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் என்ஜினீயர் எரித்துகொன்றது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக பெண்ணின் கணவர் உள்பட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போத்தனூர்,

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கல்லுக்குழியை சோ்ந்தவர் சக்திவேல் (வயது 42). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விதவை பெண் ஒருவரை திருமணம் செய்து இருந்தார். சக்திவேலுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது மகளை அழைத்துக்கொண்டு பிரிந்து சென்று விட்டதாக கூறுப்படுகிறது.

இதனால் சக்திவேல் வீட்டில் தனியாக இருந்தார். அவர் நெல்லையில் உள்ள தனது அக்காளிடம் மட்டுமே செல்போனில் பேசி வந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக சக்திவேல் அவருடைய அக்காவிடம் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கா, தனது மகன் தினேஷ் என்பவரை கோவைக்கு அனுப்பி வைத்தார். கோவை வந்த தினேஷ் சக்திவேல் வீட்டுக்கு சென்றபோது அங்கு சக்திவேல் உடல் தீயில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக கிடந்தது.

பின்னா் இதுகுறித்து தினேஷ் குனியமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், சக்திவேலுக்கும், வீட்டின் அருகே வசித்து வந்த ஒரு பெண்ணும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரியவந்தது. இந்த கள்ளக்காதல் விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணின் கணவர் சக்திவேலை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. எனவே சக்திவேல் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதுதொடர்பாக அந்த பெண்ணின் கணவர் உள்பட 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சக்திவேலின் உடல் எரிந்து எலும்புக்கூடாக கிடந்ததால் அதை போலீசாரால் மீட்க முடியவில்லை.

இதைத்தொடா்ந்து பிரேத பரிசோதனை செய்வதற்காக போலீசாருடன் கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டா்கள் குழுவினர் நேற்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பிரேத பரிசோதனை செய் தனர்.

Next Story