அறந்தாங்கியில் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.80 ஆயிரம் திருட்டு


அறந்தாங்கியில் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.80 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 27 Dec 2019 4:15 AM IST (Updated: 27 Dec 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியில் வீட்டில் 7 பவுன் நகை-ரூ.80 ஆயிரம் திருட்டு ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எழில்நகர் 7-ம் வீதியை சேர்ந்தவர் கணேசன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா(37), எழில்நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு, எழில்நகர் 5-ம் வீதியில் உள்ள தனது தம்பியின் வீட்டிற்கு சென்று தங்கினார். இதையடுத்து நேற்று மாலை சங்கீதா, அவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7 பவுன் நகை- ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story